ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஹாலிடே தீவுப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராமப்புறங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நெருப்பை அணைக்கும் பணியில் 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பற்றி எரியும் நெருப்பு காரணமாக யுனெஸ்கோவால் சூழியல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்கள் சாம்பலாகி உள்ளன.
நெருப்பு மேலும் அதிகமாக பரவி வருவதால் அப்பகுதியில் இருந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வேறிடத்திற்குச் செல்ல ஹாலிடே தீவு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.