கம்போடியாவில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு ஆசிரியைகள் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸோ எல்ஃப்தரியு (Zoe Eleftheriou) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அபிகெயில் (Abigail) ஆகியோர் கம்போடியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் பிடித்த போது பெட்ரோல் நிலையம் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிவிபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். பெட்ரோல் நிலையத்தில் இருந்த மேலும் 13 பேரும் இந்த விபத்தில் காயமடைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 665 லிட்டர் பெட்ரோலும் நொடிப்பொழுதில் ஆவியானது.