பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பஸ் கட்டணமான 30 ரூபாவானது, 34 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பஸ் கட்டண அதிகரிப்பானது இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













