மஹிந்த ராஜபக்ஸவுடனும், ராஜபக்ஸ குடும்பத்துடனும் கடுமையான குரோதத்துடன் உள்ள சிறு குழுவினரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல், ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இணைந்து அதனுாடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க செயற்பட்டுக் கொண்டுள்ளனர். அதில், ஒருவர் தான் எனது கட்சியிலிருந்த எனது பதவியை ஏற்றுள்ள லசந்த அழகியவண்ண எம்.பி. ஆவார்.
தயாசிறி ஜயசேகரவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவிலிருந்து உடனடியாக விலகிச் சென்று அமைச்சுப் பதவியை எடுக்க முயற்சித்தார். ரணில் விக்ரமசிங்கவின் எதிர்ப்பினால் அவருக்கு அமைச்சுப் பதவியை ஏற்க முடியவில்லை எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (27) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.