கைது செய்யப்பட்டுள்ள பலெய் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கிடைத்த தகவல்களை வைத்து யாழ். அல்லியாவலெய் கடற்கரைப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த வைத்திய அதிகாரியின் தகவல்களை வைத்து ஏற்கனவே 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
கிடைக்கப் பெற்ற வெடிபொருட்கள் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.