க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளதாவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
இதேவேளை, இப்பணிகளுக்காக முற்றாக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.