ரஷ்ய விஞ்ஞானியொருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீச்சு மற்றும் இரசாயனப் பொருட்கள் என்பவற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய சிறப்பு இயந்திரம் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் டொலர் பெறுமதியான இந்த இயந்திரம் கலாநிதி எவ்ஜெனி உசசேவ் என்பவரினால் வடிவமைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கலாநிதி எவ்ஜெனி உசச்சேவினால் இந்த இயந்திரம் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரஷ்ய விஞ்ஞானியும் ரஷ்ய நாட்டின் இலங்கைக்கான தூதுவரும் கலந்துகொண்டுள்ளனர்.