ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பில் நாள் அறிவிப்போ, அதனுடன் தொடர்புடைய வேட்பு மனுத் தாக்கலோ இடம்பெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இதுபற்றிப் பேசுவது பொருத்தமற்ற ஒன்று என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது பொதுக் கூட்டம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.