பயங்கரவாத தாக்குதல்களினால் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று (06) மீண்டும் ஆரம்பமாகின்றன.
பாடசாலைகளின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன.
இரண்டு கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் ஆரம்பப் பிரிவுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு மேலும் விடுமுறை வழங்குமாறும் பல தரப்புக்கள் தெரிவித்திருந்தன.
அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கு ரமழான் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.