நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற குழு மோதலை தொடர்ந்து நடைமுறைக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு சட்டம் தகர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களிடத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டுநாயக்க, திவுலபிட்டி, கட்டான ஆகிய பகுதிகளுக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.