மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று இடம்பெற்ற வாகன வித்தில் கல்முனையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு காரில் சென்றுகொண்டிருக்கும் போதே குறித்த நெடுஞ்சாலை வீதியில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பாதையை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதுண்டுள்ளது.