அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (22) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தமொன்றில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், மருத்துவ கல்விக்கு ஆகக் குறைந்த தரத்தை அறிவிக்காமை, டாக்டர்களுக்கான நடவடிக்கை குறிப்பை மாற்றியமைத்தமை, விஞ்ஞான பாடங்களில் உயர்தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு மருத்துவ நியமனங்களை வழங்க சட்டவிரோத முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவே இவ்வாறு வேலை நிறுத்தத்தில் இறங்குவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் ஆஸ்பத்திரி, மஹரகம அபேக்ஸா வைத்தியசாலை, சிறுநீரக நோய்க்கான சிகிச்சை அலகுகள் மற்றும் இராணுவ வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்த செயற்பாடுகள் இடம்பெறாது எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.