அரசாங்கம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரச பயங்கரவாத சட்டமூலமாகும். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள...
Read moreமுன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் ஊடக சமூகத்திற்குப் பொருந்தாத பல சர்ச்சைக்குரிய கூறுகள் உள்ளன என்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கருதுவதுடன் முன்மொழியப்பட்ட சட்டமூலம், 'பயங்கரவாதச் செயல்கள்' என்பதன்...
Read moreமலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாள சுப்பர்ஸ்டார் மோகன்லால் கதையின் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் ஏனைய இந்திய திரையுலகினைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். சரித்திர காலகட்டத்திய படைப்பாக தயாராகி வரும் இந்த படத்தை ஜோன் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜோன், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அனல் பறக்கும் கோபக்கனலோடு மோகன்லால் தோன்றுவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகி வரும் 'மலைக்கோட்டை வாலிபன்' மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது.
Read moreவவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து, 16 வயது மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த மாணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15)...
Read moreதமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் இடம்பெற்ற 'டவுலத்தான ரவுடி..' எனத் தொடங்கும்...
Read moreநாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் 15 ஆம் திகதி சனிக்கிழமை வருமானம் 35 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 15 ஆம் திகதி 126,760...
Read moreயாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.பண்ணை சுற்றுவட்டப்...
Read moreதென்னிந்திய திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் சிவபிரசாத் யானலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் விமானம். இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், 'நான் கடவுள்' ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடி படைப்பாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியிடப்பட்டிருக்கும் காணொளி.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர் வரும் ஜுன் மாதம் 9 ஆம திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘விமானம்’ என தலைப்பிடப்பட்டிருப்பதாலும், விமானப்பயணம் பற்றிய குழந்தையின் கனவைப் பற்றி படம் பேசுவதாலும், இந்த படம் ‘சூரரைப் போற்று’ படத்தைப் போல் தரமான படைப்பாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
Read moreநாட்டின் கிழக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிகழும்....
Read moreஆசிரியர் ஒருவரின் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அவரது வகுப்பு மாணவர் ஒருவரால் பேஸ்புக்கில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (14) இரவு நாரம்மல...
Read more