தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இதை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் சிறைகைதிகள் 67 பேரை விடுவிப்பதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் 25.02.18 தேதியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இது ஆளுநருக்கு உள்ள அதிகாரம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி விடுவிப்பதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த 67 கைதிகள் யார் என்ற பட்டியலை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.