தென்பெண்ணை ஆற்றுக் கரையோரத்தில் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து அதிகளவில் விநாடிக்கு 1360 கனஅடி தண்ணீர் வெளியேறுவதை முன்னிட்டு, வருவாய்த் துறையினர், காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக பொது மக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.