மட்டக்களப்பு, பூனானியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆசியாவில் விசாலமான ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் எந்தவித தகவலும் முஸ்லிம் சமய விவகார அமைச்சிடம் இல்லையென அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாவினால் இந்த ஷரீஆ பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படுவதாகவும், இதற்கான நிதியை சவுதி அரேபிய அரசாங்கம் இலவசமாக வழங்குவதாகவும் தனக்கு அறியக்கிடைத்தது எனவும் அமைச்சர் இன்றைய சகோதர நாளிதழொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அரச பல்கலைக்கழகங்கள் இரண்டு இருக்கையில், இந்த ஷரீஆ பல்கலைக்கழகம் ஏன் ? நிர்மாணிக்கப்படுகின்றது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மௌலவிமார்கள் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்க இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படுவதாயின் அது குறித்து முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அமைச்சின் கீழ்தான் இதன் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறித்த நாளிதழுக்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.