பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் கைபர்துங்கவா, கராச்சி, லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் வழக்கத்தைவிட மிக அதிகமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கராச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குட்பட்ட நீலம் சமவெளி பகுதியில் பெய்த பெருமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 28 பேர் பலியான நிலையில் இப்போதும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பல ஊர்கள் மூழ்கி உள்ளதால் பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களின் தஞ்சம் புகுந்துள்ளனர்.