லண்டனில் விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை கொட்டி தீர்த்ததால், பயணிகள் அவதி அடைந்தனர்.
லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் திடீரென பயணிகள் சற்றும் எதிர்பாராத விதமாக, மேற்கூரையில் இருந்து , மழை கொட்டி தீர்த்தது. 15 நிமிடங்களுக்கும் மேலாக மேற்கூரையில் விரிசல் விழுந்து மழை நீர் ஒழுகியதால், தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது.
இதனால் விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த காட்சியை படம் பிடித்த பயணி ஒருவர் இணையத்தில் பதிவேற்றம் செய்ய, அது வேகமாக பரவியது. இதையடுத்து லூடான் விமான நிலையம், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டது.