இங்கிலாந்தில் 3 பில்லியன் டாலர் செலவில் புதிய சிறைகள் கட்டுவதற்கும், தற்போதுள்ள சிறைகளை புதுப்பிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 10 ஆயிரம் புதிய சிறைச்சாலைகள் கட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று , பழைய சிறைச்சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும் என்றும், இவ்விரு பணிகளுக்காக 2.3 3 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 20 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.