புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (05) கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிருவாகிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.