கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் தேடுதல் நடவடிக்கையின் போது, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் அந்த அமைப்பின் பிரச்சாரங்கள் அடங்கிய 20 சி.டீ.க்கள் மற்றும் 02 தேசிய அடையாள அட்டைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.