ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஜனாதிபதித் தேர்தலில் தான் கூட்டுச் சேரப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
தனது கருத்துக்கு அதிக இணக்கப்பாடு காட்டும் ஒருவருடன் கூட்டுச் சேரவுள்ளதாகவும், பொது வேட்பாளர் ஒருவர் உருவாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், கடந்த 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பவராகவும், மட்டக்களப்பு தனியார் பல்கலை தொடர்பில் உரிய தீர்மானம் எடுப்பவராகவும் இருத்தல் வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.