ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ரணில், சஜித், கரு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வர வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அதனை கட்சியின் தலைமைகள் ஏற்றுக் கொள்வது போன்று தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனது கருத்தின்படி, ஐக்கிய தேசியக் கட்சி தனியாக செயற்பட்டு வெற்றி பெற முடியாது. கூட்டணியாக செயற்பட்டாலேயே வெற்றி பெறலாம். இந்த இலக்கை நோக்கி கட்சியிலுள்ள மூன்று சக்திகளும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ தரப்புக்கு ஆதரவு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

