வவுணத்தீவு பொலிஸார் கொலை வழக்கில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்தவகையில் அவருக்கான விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபருக்கு பணிப்பதாக உறுதியளித்துள்ளார் என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸாரை கொலை செய்தது தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத்தின் அமைப்பின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இவ்விடயத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேஷன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதனை அடுத்து அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ்மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி வாக்குறுதி உறுதியளித்துள்ளதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.