மன்னார், பெரியகமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியிலிருந்து ஒரு தொகுதி செல் கவர்களை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளனர்.
பிரதேச மக்கள், இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதிகளில் முழுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அக்காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பையுடன் சுமார் 6 செல் வெடி பொருளுக்கான கவர்கள் மூடிய நிலையில் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பின்னர் செல் கவரினை திறந்து பார்த்துள்ளனர். ஆனால், செல் அல்லது வெடி பொருட்கள் எவையும் அதில் காணப்படவில்லை.
இந்நிலையில் குறித்த 6 செல் கவரினையும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.