நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிப்புகளை மதிப்பீடு செய்த பின்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் சேதங்களை மதிப்பீடு செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை தேசிய கொள்கைள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.