சீனாவின் வன உயிரியல் பூங்காவில் கூரான கல்லை எடுத்து கண்ணாடியை உடைக்கும் புத்திசாலித்தனமான குரங்கின் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த 20-ம் தேதி சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஸெங்க்சவ் ((Zhengzhou)) வன உயிர் பூங்காவில் கொலம்பியாவைச் சேர்ந்த கபுச்சின் குரங்குகளைப் பார்வையிட்ட ஒருவர், ஒரு குரங்கு மட்டும் கல்லில் மற்றொரு கல்லை மோதச் செய்து கூரான கல் ஆயுதத்தைத் தயாரிப்பது போல் தோன்றியது. பின் அதனைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்தக் குரங்கு ஓடிச் சென்று கூரான கல்லால் கண்ணாடிக் கூண்டைத் தாக்குகிறது.
கண்ணாடி உடைந்ததும் அங்கிருந்து அஞ்சி ஓடிய குரங்கு ஒளிந்துகொண்டது. வன உயிர்பூங்கா நிர்வாகத்தால் உடனடியாக வேறு கண்ணாடிக் கூண்டு மாற்றப்பட்டது. பிற குரங்குகளை விட இந்த குட்டிக் குரங்கு வித்தியாசமாக நடந்து கொள்ளும் என்றும், வால்நட்களை பிற குரங்குகள் வாயால் கடித்துச் சாப்பிட்டால், இந்தக் குரங்கு மட்டும் கல்லைக் கொண்டு கொட்டி சாப்பிடும் என ஆச்சர்யத்தோடு தெரிவித்துள்ளனர்.