தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் நேற்று (பெப் 05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தம்பகல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கல்பொக்க வீதியின் எந்தகலஹின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து பெகோ இயந்திரம் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.