மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் இணைந்து செயற்படுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா இது தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவை இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளன.