நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் நடாத்திய பயங்கரவாத குழுவுக்கு இலங்கைக்குள் மற்றுமொரு தாக்குதலை நடாத்தும் திட்டம் இருப்பதற்கு முடியும் என இந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக்குள் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளின் எச்சரிக்கை இன்னும் முழுமையாக நீங்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகள் இன்னும் செயற்பட்டு வருவதாகவே நம்ப வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள் இதுவரையில் முழுமையாக ஒழிக்கப்படவில்லையென்பதனால், இன்னும் தாக்குதலுக்கு திட்டம் தீட்டலாம் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.