மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்களுடன் துப்பாக்கி ரவவைகள், கணனிகள் மற்றும் சீ.டீ.க்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைத்து பாரிய தேடுதல் நடவடிக்கையினை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.