200 டன் எடைக்கொண்ட கடல் படகை ஒற்றை விரலால் இழுத்து ஜார்ஜியாவை சேர்ந்த பலசாலி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஜார்ஜியாவை சேர்ந்த பளு தூக்கும் வீரரான ஜியோர்கி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் இந்த சாதனை செய்துள்ளார்.
பட்டுமி((BATUMI)) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்ப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடைக்கொண்ட படகினை ஜியோர்கி தனது இடது கையின் நடுவிரலில் இழுத்து அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் உதவியுடன் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இதனை செய்ய கடினமாக இருந்ததாகவும், ஆனால் செய்து முடித்துவிட்டதாகவும் ஜியோர்கி உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.
ஒரே விரலில் கனமான படகை இழுத்த அவரது சாதனையை அங்கீகரித்துள்ள ஜார்ஜியன் சாதனைகள் சம்மேளனம், இதுகுறித்து கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை அணுக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.