Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாரமல்லவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | உப பொலிஸ் பரிசோதகர் கைது

January 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

குருநாகல் நாரமல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறியை மடக்கி பிடித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு அனுப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாரமல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பெலஸ்ஸ வலங்கட பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (18) இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாரமல்ல பிரதேசத்தில் இருந்து கிரியுல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்துவதற்கு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும் குறித்த லொறி நிறுத்தாமல் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் நாரமல்ல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கடமையில் ஈடுப்பட்டிருந்தாகவும் அவர்கள் இருவரும் அவர்களின் தனிப்பட்ட வாகனத்தில் சிவில் உடையில் கடமையில் இருந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உத்தரவை மீறி பயணித்த குறித்த லொறியை பின்தொடர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை மடக்கி பிடித்துள்ளனர். இதன்போது லொறியை அதிகாரிகள் சோதனைக்குட்படுத்துவதற்கு முயற்சித்ததாகவும் இதன்போது உப பொலிஸ் பரிசோதகர் லொறியின் சாரதியின் தலைப்பகுதியில் துப்பாக்கியை வைத்துள்ளதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது படுகாயமடைந்த சாரதி நாரமல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 41 வயதுடைய மஹரவிச்சிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த பிரதேசவாசிகள் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் அங்கு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர் மற்றும் பிரதேசவாசிகள் நாரமல்ல பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலையும் சேதப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸ் விசேட அதிரப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கவனயீனம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் குறித்த துப்பர்ககிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவொன்றினால் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இப்பீடு வழங்குவதும் தொடர்பில் ஆராய்ப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளிக்கு ஏற்பட்ட அவலம்

Next Post

நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

Next Post
நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures