இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் இணைந்து நடித்தவர் ஷரத்தா ஆர்யா. அதன் பின், வந்தே மாதரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்தார். சில படங்களுக்குப் பின், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அவர் கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடிப் போனார். ஒரு கட்டத்துக்கு மேல், அவருக்கு எங்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவர் சின்னத் திரையில் கவனம் செலுத்தத் துவங்கினார். தற்போது அவர், நாச் பலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவின் 9வது சீசனில் நடித்து வருகிறார். பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் மத்தியில் ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் அவர் வளைந்து-நெளிந்து ஆடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை ஆண் நண்பர் தலைகீழாக தூக்கி நிறுத்த வேண்டும். இப்படியொரு காட்சியில் இருவரும் ஆடிக் கொண்டிருந்த போது, ஆண் நண்பர் ஆலம், ஷரத்தாவை தலை கீழாகத் தூக்கினார். அப்போது, கை தவறி விட்டது. தலைகீழாக இருந்த ஷரத்தா, அப்படியே தரையில் விழுந்தார். இதனால், அவருக்கு தலையிலும், கழுத்துப் பகுதியில் பலத்த அடிபட்டது.
வலியால் துடித்த ஷரத்தாவை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். இதன் பின், ஷரத்தா நார்மல் ஆகி இருக்கிறார்.
இது குறித்து நடிகை ஷரத்தா கூறியதாவது: இது தவறுதலாக நடந்த சம்பவம்தான். ஏற்கனவே பயிற்சியாளர்கள் முன், இப்படியொரு காட்சியில் நடனமாடி நடித்தபோது, எல்லாமே சரியாக இருந்தது. ஆனால், ஷோவில் ஆடும்போது, ஆலனின் கை நழுவி விட்டது. இதனால், நான் தலைகீழாக கீழே விழ வேண்டியதானது. கீழே விழுந்த போது, ரொம்பவே பயந்து விட்டேன். அடியும் பலமாக விழுந்தது. தலையும்; கழுத்தும் ஏதோ ஆகி விட்டது என பயந்தேன். ஆனால், பெரிதாக எதுவும் இல்லை. சிகிச்சைக்குப் பின், இப்போது நார்மலாகி இருக்கிறேன். தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வேன். இறைவன் எனக்கு எப்போது துணை இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.