லைகா மற்றும் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் ஆரம்பமானது. சில நாட்களுக்குப் பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு நின்றது. வடிவேலுவுக்கும், இயக்குனருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிதாகி படம் மேற்கொண்டு வளரவில்லை.
கடந்த பல மாதங்களாக நடந்து வந்த பிரச்சினைக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பு கேட்ட நஷ்ட ஈட்டுத் தொகையை வடிவேலு தர சம்மதித்ததால் பிரச்சினையை முடித்துக் கொண்டார்கள். ஆனால், தற்போது நஷ்டஈடு தருவதிலிருந்து வடிவேலு பின் வாங்கியுள்ளாராம்.
அதோடு, சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நாயகனாக நடிக்க திட்டமிட்டு வருகிறாராம். ஆனால், ஷங்கர் தரப்புக்கு நஷ்டஈட்டுத் தொகையைத் தராமல் அவர் எந்த புதுப்படத்திலும் நடிக்க முடியாது என திரையுலகத்தில் உள்ள சங்கங்களில் சொல்லி வைத்துள்ளார்களாம். அதனால், வடிவேலு தராத பட்சத்தில் சிக்கல் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.