பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அபிராமி, முகென், லாஸ்லியா, கவின், மதுமிதா ஆகிய ஐந்து பேர் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தன்னை தானே வருத்திக் கொண்டதாகக் கூறி, மதுமிதாவை பிக்பாஸ் வெளியேற்றினார். மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மதுமிதா வெளியேற்றப்பட்டு விட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என யாரும் நினைத்துவிட வேண்டாம் என சனிக்கிழமையே கமல் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் முதலில் சில பல பஞ்சாயத்துகளை எல்லாம் முடித்துவிட்டு கடைசியாக எவிக்ஷன் நடைமுறைக்கு வந்தார் கமல்.
முதலில் கவின், லாஸ்லியா காப்பாற்றப்பட்டுவிட்டதாக அறிவித்த கமல், ஒரு சிறிய இடைவேளைவிட்டு அபிராமி தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதாக அறிவித்தார்.
வழக்கமாக எதற்கெடுத்தாலும் அழும் அபிராமி, எவிக்ஷனை கேட்டும் கூட கண்ணில் தண்ணீர் வைக்கவில்லை. லாஸ்லியா, ஷெரீன் ஆகியோர் கதறி அழுதும் கூட அபி அழவில்லை. அதே சிரித்த முகத்துடன், பிக் பாஸ் மேடைக்கு சென்று கமலை கட்டிப்பிடித்து குட்பை சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் விடைப்பெற்றார் அபிராமி.
இது பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்ல, மக்களையும் ஆச்சர்யப்படுத்தியது.