பிக்பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பித்தில் இருந்தே சர்ச்சைகளுடன் தான் தொடர்கிறது. பெண்களை உரசியதா சரவணன் கூறியது, சேரன் – சரவணன் சண்டை, கவின் – லாஸ்லியா – சாக்ஷி முக்கோணக் காதல், அபிராமி – முகென் காதல் என கண்டென்டுகள் நிறைந்த எபிசோடுகளாகத் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதில் சமீபத்திய பரபரப்பு மதுமிதாவின் தற்கொலை முயற்சி. ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, கர்நாடகா காவிரி விவகாரம் குறித்து சில கருத்துகளை தெரிவித்ததாக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபத்தின் உச்சிக்கு சென்ற மதுமிதா தனது கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.
இதனால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றிவிட்டனர். இந்த சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு ரகளை நடந்திருக்கிறது. இந்த முறை கவினுக்கும், கஸ்தூரிக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையின் போது தீயநோக்கத்தில் கவின் தன்னைத் தொட்டதாக கஸ்தூரி, பிக்பாஸிடம் புகார் கூறியுள்ளார். இதனால், தன்னை உடனே வெளியே அனுப்பும்படி அவர் கேட்டுள்ளார். அதோடு, கோபத்தில் ஒரு கேமராவை அவர் உடைத்து விட்டதாகவும், பிக்பாஸ் படப்பிடிப்பு சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது.
ஆனால் இதன் உண்மைதன்மை குறித்து இன்னும் தெளிவாகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரொமோக்களை வைத்து தான் இந்த பிரச்சினை குறித்து தெரியவரும்.