பழமையான நடைமுறைகளை கொண்டுள்ள சவூதி அரேபியா, மன்னராட்சியின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை கொண்டுள்ளது.
இந்நாட்டில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.
மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. மேலும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் சவுதி அரேபியா சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்காக அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.