Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் மற்றும் ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள் அறிமுகமாகின்றன.

2023இல் தலா 7 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களில் முதல் சுற்று நடத்தப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் சுற்றில் விளையாடின.

ஆனால், தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக 2027இல் நடத்தப்படவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் புதிய முறைமை அறிமுகமாகிறது.

ஆடவர் உலகக் கிண்ணத்தில் சுப்பர் சீரிஸ் முறை

ஆடவர் அணிகளுக்கான தரிவரிசையில் 12, 13, 14ஆம் இடங்களிலுள்ள அணிகள் சுப்பர் சீரிஸ் சுற்றில் முதலில் விளையாடும். அதில் முதலாம் இடத்தைப் பெறும் அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும்.

இரண்டாம் சுற்று தலா 6 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களில் நடத்தப்படும். இதில் 30 போட்டிகள் நடைபெறும். அவற்றில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளும் இரண்டு குழுக்களிலும் அதிசிறந்த நான்காவது இடத்தைப் பெறும் அணியும் மூன்றாம் சுற்றான சுப்பர் 7 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் 21 போட்டிகள் நடத்தப்படும்.

இநத சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளுக்கு முன்னேறும்.

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளுக்கு முன்பதாக இரண்டு நீக்கல் போட்டிகள்

2028இல் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிகளுக்கு முன்பதாக இரண்டு நீக்கல் போட்டிகளை ஐசிசி அறிமுகப்படுத்தி போட்டி முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் 2028 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த புதிய முறைமை அறிமுகமாகும்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றில் ஐந்து அணிகளைக் கொண்ட நான்கு குழுக்களில் முதல் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால், 2028இல் 4 அணிகளைக் கொண்ட ஐந்து குளுக்களில் முதல் சுற்று நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இதற்கு அமைய முதல் சுற்றில் முன்னர் விளையாடப்பட்ட 40 போட்டிகள் 30ஆக குறைந்துள்ளது.

முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தலா 5 அணிகளைக் கொண்ட சுப்பர் 10 சுற்றில் விளையாடும். முன்னர் சுப்பர் 8 சுற்றாக இது நடத்தப்பட்டது.

சுப்பர் 10 சுற்று போட்டிகள் நிறைவில் இரண்டு குழுக்களிலும் முதலிடத்தைப் பெறும் இரண்டு அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

ஒவ்வொரு குழுவிலும் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு நொக் அவுட் போட்டிகளில் விளையாடும்.

இரண்டு நொக் அவுட் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

12 அணிகள் நேரடி தகுதி

2028 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன.

இணை வரவேற்பு நாடுகள் என்ற வகையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து, 2026 ரி20 உலகக் கிண்ணத்தில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் என்ற வகையில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, ரி20 தரவரிசையின் பிரகாரம் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய 12 அணிகள் நேரடியாக விளையாட தகுதிபெற்றுள்ளன.

எஞ்சிய எட்டு இடங்கள் 16 அணிகளுக்கு இடையிலான உலக தகுதிகாண் சுற்றின் மூலம் தீர்மானிக்கப்படும்.

இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய கனடா, இத்தாலி, நமிபியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய  அமெரிக்கா   ஆகிய 8 அணிகளுடன் ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய வலயங்களிலிருந்து 2 தகுதிகாண் அணிகளும் அமெரிக்காக்கள் மற்றும் கிழக்கு ஆசியா/பசுபிக் வலயங்களிலிருந்து தலா ஒரு தகுதிகாண் அணியும் உலக தகுதிகாண் சுற்றில் விளையாடும்.

Previous Post

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்காலத் தடை நீடிப்பு

Next Post

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

Next Post
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures