வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் அமரபுர பீடத்தினால் கௌரவ பட்டமொன்று வழங்கப்படவுள்ளதாக அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர் தெரிவித்துள்ளார்.
லுனுகம்வெஹரவில் நிர்மானிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை திறந்து வைக்கும் நிகழ்வில் வைத்து இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விகாரை சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.