கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த ஊரடங்கு சட்டம் காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்துவரும் நிலையிலேயே இன்றும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.