க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிட முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டுக்குரிய பரீட்சைப் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக 68009 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.