நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் “ரனவிரு” மாவீரர் தினத்துக்கு இணையாக, கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர்களது கெடட் சங்கத்தினால் நினைவு வைபவம் இன்று (19) நடைபெற்றது.
நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்நீத்த முப்படை மற்றும் பொலிஸைச் சேர்ந்த தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர்கள் 37 பேர் இதன்போது நினைவுகூரப்பட்டனர்.
மத வழிபாடுகள் மற்றும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன.
கல்லூரியின் ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான வருண ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வு கல்லூரி அதிபர் நாமில் சந்தன குமார தலைமையில் நடைபெற்றது.



