எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று இடம்பெறக்கூடாது என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற “ரணவிரு” தேசிய போர்வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அப்போது அவர், எமது ஆட்சியின் கீழ் எவ்வாறான சூழ்நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று இடம்பெறக்கூடாது என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

