மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரு கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், மற்றுமொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். எனவே, இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, சில வாரங்களுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.