இலங்கை மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு இ.மி. சபை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014 செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளையே இவ்வாறு சேவைக்கு திரும்புமாறு மின்சாரசபை அழைப்பு விடுத்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை முன்வைக்காததால் மின்சார சபை ஊழியர்கள் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
மின்சார சேவைகளை தடையின்றி வழங்குவதற்கே மேலதிக ஊழியர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.