அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்பவர்களின் பதவிகளை அரசாங்கத்தில் இணைந்து கொண்டு, பொறுப்பேற்க கூட்டு எதிர்க் கட்சியில் இன்னுமொரு குழுவினர் எதிர்பார்த்து தயாராகவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொள்வதாக வார்த்தை அளப்பவர்கள் யாரும் அரசாங்கத்திலிருந்து செல்ல மாட்டார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.