இந்தியாவில் உயிருக்கு அஞ்சி குடியேறியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை எதிர்த்து அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எங்களை முஸ்லிம்களாக பார்க்காதீர்கள். மனிதர்களாக பாருங்கள் என இந்தியாவில் குடியேறிய ரோஹிங்ய முஸ்லிம்கள் இந்திய சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மியன்மார் பௌத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பிய ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியா, பங்களாதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40000 ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவது தொடர்பாக பங்களாதேஷ் மற்றும் மியான்மர் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
மியான்மரிலிருந்து வன்முறைக்கு அஞ்சி 3 லட்சம் பேர் அகதிகளாக பங்களாதேஷுக்குள் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இம்மனு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணையை 18 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.