ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்று பாகிஸ்தானும் சீனாவும் தோல்வியைத் தழுவின.
முன்னதாக தொலைபேசியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு நடத்தினார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இம்ரான் கானிடம் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கான் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமருடன் டிரம்ப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வானொலியில் வெளியான செய்தியில் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினை குறித்து டிரம்ப்பிடம் முறையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.