ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை சாத்தியப்படாது போனால், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவினையும் இம்முறை எம்மால் பெற முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றிபெற முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்தினபுரியில் இடம்பெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.